மென்தமிழ்

மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி மாணவர்களின் படைப்புத்திறன்களை இணைய உலகில் வெளிப்படுத்துவதற்காக கல்லூரியின் தமிழ்த்துறை (சுயநிதி) உருவாக்கிய வலைப்பூ.

Tuesday 29 November 2011

தமிழ் ஊடகம்

சங்கம் வளர்த்த எம்
சிங்கத் தமிழருக்கு
பங்கம் வைக்க பங்காளிகள்
பலர் பண்டைய காலத்தில்!

தடைகள் பல தகர்த்து
தாய்மொழியாம் தமிழை
சேய்கள் பலர்
செம்மையுற வளர்த்தனர்!

Wednesday 23 November 2011

சுனாமி

விஞ்ஞானத்தால்
விண்ணையும் தொட்டுவிடலாமென்ற
மனித எண்ணத்திற்கு
இயற்கை
கொட்டுவைத்து
தரை தள்ளிய ஒரு நிகழ்ச்சி- சுனாமி

பூமிக்குமேல் நிகழ்ந்தால்தான்
பூகம்பம் என்றிருந்தேன்..
கடலுக்கடியிலுமா நிகழும் பூகம்பம்....

சமச்சீரக்கல்வி

ஜுன் மாதம்-
படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில்
மாணவர்கள்!
புத்தகத்தைக் கொடுக்க வேண்டுமென்ற
வருவத்தில் அரசு!
   
ஆரம்பமே அபசகுனமாய்
சூரியனைக் காணவில்லை!
தேர்தலில் மட்டுமல்ல
பாடப்புத்தகத்திலும்
தொலைந்துவிட்டது...

Friday 14 October 2011

பூமி

ஓர் நொடி கூட ஓய்வின்றி
தன்னைத் தானே சுற்றிக்கொண்டும்
எங்களையும் தாங்கிக்கொண்டு
உருண்டு கொண்டிருக்கும் பூமியே நாங்கள்
சுருண்டு விழுவதும் உன்னில்தான்
சுகமாய் வாழ்வதும் உன்னில்தான்.

பூமியே உன்னைப் பற்றி புகழவும் முடியாமல் இகழவும் முடியாமல்
உன்னிலே பூக்கும் புற்றுநோய் பற்றி
புலமை நயத்துடன் பாட வந்துள்ளேன்- உன்
புத்திரன் இங்கு..

Wednesday 14 September 2011

கல்லூரி


கனவுகளுக்கு சிறகு முளைக்கும் காலம்

கண்கள் வழியே பார்த்த உலகம்
கல்லூரி வழியே இன்னும் பெரிதாய்.

மறுபடி ஒருமுறை வரக்கூடாதா என
கடந்து சென்றவர்களும்
கடந்துவிடக் கூடாது என
வெளியேறப் போகிறவர்களும்
என்னவென்றே தெரியாமல்
புதியவர்களும் எண்ணிக் கொண்டிருக்கும் களம்.

தேர்வு

அவள் பெயர்
"தேர்வு"
என்னைப்
பயமுறுத்தியவளும் அவள்தான்,
பயனளித்தவளும் அவள்தான்!

நான்
விவரமாறியா காலதிலிருந்தே
விரட்டி விரட்டி காதலிக்கும்- என்
வித்தக காதலி இவள்!

இவளை அறியாதோர்
இவ்வையகத்தில் இல்லை!

வகுப்பறை

வகுப்பறை ஓர் கருவறை.
இதில் கருக்கொண்டு
உயிர்த்தெழும்
உயிர்கள் எத்தனை எத்தனை!

ஆண்டு தோறும் சூல் கொண்டு
உயிர் சுமக்கும் தாய் அவள்.

மாணவன்

கடல் அலைபோல்
ஓயாத ஆர்ப்பாட்டம்
மாணவப் பருவம்

கொஞ்சம் குறும்பு
நிறைய மகிழ்ச்சி
அடங்காத திமிர்
அத்தனைக்கும் சொந்தக்காரர்கள்

நீங்கள் செய்யும் சேட்டைகள்
ஏராளம்
நான் சொல்லவா
ஏராளம்

Friday 9 September 2011

சமச்சீர்க் கல்வி

நீதியும் வெல்லும்
எப்போதாவது.
சமமும் இல்லாமல்
சீரும் இல்லாமல்
கல்வி இருந்த நிலை மாற
உச்சநீதி மன்றம் வழங்கிய
உச்சபட்ச நல்ல தீர்ப்பு
சமச்சீர் கல்வி.

அரசியலில் கல்வி அவசியம்
கல்வியில் அரசியல் அனாவசியம்
என்பதை அனைவருக்கும்
உணர்த்திய தீர்ப்பு.