மென்தமிழ்

மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி மாணவர்களின் படைப்புத்திறன்களை இணைய உலகில் வெளிப்படுத்துவதற்காக கல்லூரியின் தமிழ்த்துறை (சுயநிதி) உருவாக்கிய வலைப்பூ.

Tuesday 29 November 2011

தமிழ் ஊடகம்

சங்கம் வளர்த்த எம்
சிங்கத் தமிழருக்கு
பங்கம் வைக்க பங்காளிகள்
பலர் பண்டைய காலத்தில்!

தடைகள் பல தகர்த்து
தாய்மொழியாம் தமிழை
சேய்கள் பலர்
செம்மையுற வளர்த்தனர்!

Wednesday 23 November 2011

சுனாமி

விஞ்ஞானத்தால்
விண்ணையும் தொட்டுவிடலாமென்ற
மனித எண்ணத்திற்கு
இயற்கை
கொட்டுவைத்து
தரை தள்ளிய ஒரு நிகழ்ச்சி- சுனாமி

பூமிக்குமேல் நிகழ்ந்தால்தான்
பூகம்பம் என்றிருந்தேன்..
கடலுக்கடியிலுமா நிகழும் பூகம்பம்....

சமச்சீரக்கல்வி

ஜுன் மாதம்-
படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில்
மாணவர்கள்!
புத்தகத்தைக் கொடுக்க வேண்டுமென்ற
வருவத்தில் அரசு!
   
ஆரம்பமே அபசகுனமாய்
சூரியனைக் காணவில்லை!
தேர்தலில் மட்டுமல்ல
பாடப்புத்தகத்திலும்
தொலைந்துவிட்டது...